வேகக் கட்டுப்பாட்டினை இழந்த பாரவூர்தியொன்று, முச்சக்கரவண்டித் தரிப்பிடத்திலிருந்த மூன்று முச்சக்கரவண்டிகளை மோதித்தள்ளியுள்ள சம்பவம் பதுளை, பசறை நகரில் இன்று காலை இடம்பெற்றது.
இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர் , ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது விபத்துக்குள்ளாகிய மூன்று முச்சக்கரவண்டிகளில், ஒரு முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்துள்ளது , ஏனைய இரு முச்சக்கரவண்டிகளும் வீதியோரத்தில் சேதமாகியுள்ளதுடன் , விபத்துக்குள்ளாகிய பாரவூர்தி வீதியில் தடம்புரண்டுள்ளது.
காயங்களுக்குள்ளான மூவரில் ஒருவர், ஆபத்தான நிலையில் பதுளை அரச வைத்தியசாலையிலும், ஏனைய இருவரும் பசறை அரச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்த மூவரில் பாரவூர்தி சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாரவூர்தி சாரதியின் கவனயீனமும், பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததுமே விபத்துக்கு காரணமென தெரிவித்துள்ள பொலிசார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

