Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

September 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாடு முழுவதும் இன்று புதிய நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம்

இலங்கை பெட்ரோலியக்  கூட்டுறவு (CPC) அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறையின் காரணமாக 400 நிரப்பு நிலையங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, எரிபொருள்  நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள், அடுத்த நாளுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள, முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டத்தை, பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 

மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் | Filling Stations To Be Closed

அரசாங்கம் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இதற்காக முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மறுநாளுக்கான எரிபொருளை பெறுவதற்கு முதல் நாள் இரவு 9:30 மணிக்கு முன்னர் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ராஜபக்ச கூறினார்.

எனினும் வருமானத்தை நம்பி பணம் செலுத்துவது அவர்களுக்கு கடினமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். முதல் நாள் இரவு 9:30 மணிக்குள் அல்லது அதற்கு முன் பணம் செலுத்தப்படாவிட்டால், அடுத்த நாள் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையங்கள் (CPSTL) எரிபொருளை வழங்காது என்று அவர் கூறினார்.

பெட்ரோல் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ள கூட்டுத்தாபனம் 

மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் | Filling Stations To Be Closed

இதன் விளைவாக, சில நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டன. அத்துடன் எரிபொருளுக்கான நீண்ட வரிசை காணப்பட்டமைக்கான காரணம், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இரவு 9:30 மணிக்கு முன் பணம் செலுத்த முடியவில்லை என்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களும் இதேபோன்ற கட்டண முறையைக் கொண்டுள்ளன, ஆனால் அவை நள்ளிரவு வரை காலக்கெடுவைக் கொண்டுள்ளன.

நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் நுகர்வோர் தேவையும் அதிகரித்துள்ளதால் எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறிய ராஜபக்ச, ஒரு நாளைக்கு 4000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3000 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகத்தை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார். 

Previous Post

உணவு பணவீக்கத்தில் மோசமான சாதனையை பதிவு செய்த இலங்கை

Next Post

புதிய கதாப்பாத்திரங்களை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு

Next Post
புதிய கதாப்பாத்திரங்களை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு

புதிய கதாப்பாத்திரங்களை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures