Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முஸ்லிம் தலைமைகள் சஜித்துக்கான ஆதரவை விளக்கிக்கொள்ளவேண்டும்

November 1, 2019
in News, Politics, World
0
சம்பிக ரனவகவை  பிரதமராக நியமிப்பதாக சஜித் அறிவித்தால் முஸ்லிம் தலைமைகள் சஜித்துக்கான ஆதரவை விளக்கிக்கொள்ளவேண்டும் என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,
சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால், இனவாதிகளின் பிறப்பிடம் சம்பிக ரனவகவை பிரதமராக நியமிக்க ஆலோசனைகள் நடப்பதாக நம்பகமாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் நாம் மிக அவதானமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும். சம்பிக ரனவக என்பவர் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே முஸ்லிம் விரோத பிரசாரத்தை துவங்கி இந்த நாட்டில் இனவாதத்தினை வித்திட்ட முக்கியஸ்தர்.
நூறு ரதன தேரர்களுக்கும் , ஆயிரம் கம்மன்பிலக்களுக்கும் சமமானவரே இந்த சம்பிக என்பதை எமது முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அல்கைதா அல் ஜிஹாத் என்ற நூலை எழுதி முஸ்லிம் விரோத போக்கிற்கு இலங்கையில் புதிய பரிணாமத்தை கொடுத்துள்ள சம்பிக ரனவக பிரதமராக  நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டால்  சஜித்துக்கு முஸ்லிம் தலமைகள் வழங்கிவரும் ஆதரவை உடன் வாபஸ் பெற வேண்டும் என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கோரியுள்ளது.
Previous Post

ரிசாத் ஹக்கீம் போன்ற தலைவர்களால் முஸ்லிம் மக்களுக்கு நன்மை இல்லை !!

Next Post

சினிமாவுக்கு நான் ஊத்தப்பம் தான்

Next Post

சினிமாவுக்கு நான் ஊத்தப்பம் தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures