Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவில் மலேரியா பரவும் அபாயம்

April 27, 2018
in News, Politics, World
0

முல்லைத்தீவு மாவட்டத்தில், மலேரியா க் காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக, இம்மாவட்டத்தின் மலேரியாத் தடுப்பு இயக்கத்தின் வைத்தியப் பொறுப்பதிகாரி வி.விஜிதரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தி சுகாதாரத் திணைக்களப் பணிமனை மண்டபத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“இலங்கையில், மலேரிய நுளம்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டாலும், அது முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற குளங்கள், ஆறுகள், நீர் ஓடைகளிலேயே, மலேரியாவைப் பரப்பக்கூடிய அனோபிளிஸ் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன.

“முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து, இந்தியாவுக்குச் சென்றுவரும் மக்களின் அளவு அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்றால், அதற்குரிய தடுப்பு மருந்துகளை ஏற்றிக்கொள்ளலாம். மக்கள் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால், தடுப்பு மருந்தை எடுக்க வேண்டும்” என, அவர் வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

Next Post

சமீர சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்

Next Post

சமீர சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures