Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முல்லைத்தீவில் தொடரும் கனமழை , வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து செய்வதில் சிரமம் !

November 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முல்லைத்தீவில் தொடரும் கனமழை , வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து செய்வதில் சிரமம் !

முல்லைத்தீவு மாவட்டத்தில்  நந்திக்கடல்  வட்டுவாகல் மற்றும் சாலை கடல் நீர் ஏரிகள் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதில் மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளதுடன் இரண்டினையும் கடலோடு சேர  வெட்டிவிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழை வெள்ளம் காரணமாக நந்திக்கடல் நீர் ஏரி நிரம்பியுள்ளதால் வட்டுவாகல் பாலத்திற்கு மேலாக வெள்ளநீர் வழிந்தோடிவருகின்றது இதனால் இந்த பாலம் ஊடாக போக்குவரத்து செய்வதில் மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இதேவேளை சாலைக்கடல் நீர் ஏரியும் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இரட்டைவாய்க்கால் சாலை வீதியில் மழைவெள்ளம் நிரம்பி காணப்படுகின்றது சுமார் 5 கீலோமீற்றர் தூரத்திற்கு வெள்ள நீர் காணப்படுவதால்  போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் வலைஞர் மடம்,அம்பலவன் பொக்கணை,மாத்தளன் மக்களின் போக்குவரத்து மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள் மழைவெள்ளம் தேங்கி நிற்பதால் தாள் நில பிரதேசங்களை அண்டிய  விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. விவாசய செய்கைக்கு செல்லும் மூன்று பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வீதிகளில் மழைவெள்ளம் காணப்படுவதால் வட்டுவாகல் பாலத்தினையும்  சாலை முகத்துவாரத்தினையும் உடனடியாக வெட்டிவிடு மாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

வெட்டினால்தான் வீச்சுவலை தொழில் செய்யமுடியும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதேவவேளை வட்டுவாகல் கடல் வெட்டுவது தொடர்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கொண்ட குழுவின் தீர்மானத்திற்கு அமையவே வெட்டப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக மழைபெய்யுமாக இருந்தால் வட்டுவாகல் பாலத்தின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் மாத்தளன்,அம்பலவன் பொக்களை பகுதிகளில் மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர்  புகும் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

கே .குமணன் 

Previous Post

மதுபோதையில் பயணித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

Next Post

யாழில் ஆலய நிர்வாகத்தில் தலையிட்டவருக்கு நேர்ந்த கதி

Next Post
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

யாழில் ஆலய நிர்வாகத்தில் தலையிட்டவருக்கு நேர்ந்த கதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures