Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

மும்பை அணிக்கு முதல் வெற்றி

November 5, 2017
in Sports
0

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சி பிரிவில் மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் மும்பை – ஒடிசா அணிகளுக்கு இடையிலான சி பிரிவு போட்டி புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 289 ரன்களையும், ஒடிசா அணி 145 ரன்களையும் எடுத்தது. இதைத்தொடர்ந்து ஆடிய மும்பை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை எடுத்தது. அந்த அணியைச் சேர்ந்த லாட் 117 ரன்களைக் குவித்தார்.

வெற்றிபெற 413 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த ஒடிசா அணி, 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்களை எடுத்திருந்தது. போடார் 48 ரன்களுடனும், சாந்தனு மிஸ்ரா 4 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஆட்டத்தை தொடர்ந்த ஒடிசா அணி 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக போடர் 87 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணியில் ஆகாஷ் பார்க்கர், தவல் குல்கர்ணி ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். ஒடிசாவுக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம், மும்பை அணி இந்த ஆண்டின் ரஞ்சி கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது.

கர்நாடகா வெற்றி

புனே நகரில் நடந்த ஏ பிரிவு போட்டியில் கர்நாடகா அணியுடன் மகாராஷ்டிரா அணி மோதியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மகாராஷ்டிரா அணி 245 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய கர்நாடக அணி, தங்கள் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 628 ரன்களைக் குவித்தது. கர்நாடக அணியில் மயங்க் அகர்வால் மிகச் சிறப்பாக ஆடி 304 ரன்களைக் குவித்தார். அவருக்குத் துணையாக சமர்த் 129 ரன்களையும், கருண் நாயர் 116 ரன்களையும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து ஆடிய மகாராஷ்டிரா அணி, தங்கள் 2-வது இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து இப்போட்டியில் கர்நாடக அணி ஒரு இன்னிங்ஸ் 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கர்நாடக அணியின் வேகப்பந்து வீச்சாளரான அபிமன்யு மிதுன் 66 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக மயங்க் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹைதராபாத் வெற்றி

டெல்லியில் நடந்த மற்றொரு ஏ பிரிவு போட்டியில் ஹைதராபாத் – ரயில்வே அணிகள் மோதின. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 474 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய ரயில்வே அணி, 246 ரன்களை எடுத்து பாலோ ஆன் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 250 ரன்களை மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து வெற்றிபெற 23 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவ்ந்த ஹைதராபாத் அணி, விக்கெட் இழப்பின்றி அந்த ஸ்கோரை எட்டியது. இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Previous Post

இந்தியாவின் யார்க்கர் எக்ஸ்பிரஸ்

Next Post

ஆபரேஷன் முடிந்தது, வீட்டிற்கு கிளம்புகிறேன்

Next Post

ஆபரேஷன் முடிந்தது, வீட்டிற்கு கிளம்புகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures