Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறை!

January 17, 2020
in News, Politics, World
0

14 வயது சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலுக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதி இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், சந்தேக நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடாக வழங்குமாறும் உத்தவிடப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அக்குரஸ்ஸ நகரிலுள்ள வாடி வீடொன்றில் 14 வயது சிறுமி ஒருவரை அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனில் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டது.

இதனையடுத்து 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், இரண்டு மாதங்களும் 10 நாட்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post

குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

Next Post

ரஜினி பாராட்டிய வெற்றி

Next Post

ரஜினி பாராட்டிய வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures