முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து அந்த வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்தது. ஆனால் மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவை வெளியிடுவதை மார்ச் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்தார்.