Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை

December 14, 2019
in News, Politics, World
0

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சாரதியான துசித திலும் குமார ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி காஞ்சனா நிரஞ்ஜனா டி சில்வா  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி இரவு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இடம்பெறும் போது வாகனத்தை முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவே செலுத்தியுள்ளதாக தகவல்கள் உள்ளதாகவும், அவரிடம் இது தொடர்பில் வாக்கு மூலம் பெற வேண்டியுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளது.

இதனால், இக்காலப் பகுதியில் அவர் வெளிநாடு செல்ல வாய்ப்பிருப்பதனால் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தைக் கோரியதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

கடந்த அரசாங்கத்தின் பழிவாங்கல் குறித்து கண்டறிய விசேட குழு

Next Post

தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு ஸ்ரீ ல.சு.கட்சியிடம்- மைத்திரிபால சிறிசேன

Next Post

தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு ஸ்ரீ ல.சு.கட்சியிடம்- மைத்திரிபால சிறிசேன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures