முன்னாள் வெளியுறவு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். யு. எம். அலி சப்ரி, தான் அரசியலுக்குத் திரும்ப மாட்டேன் என்று கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
இருப்பினும், ஒரு வழக்கறிஞராக, நாட்டின் மக்களின் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து அவர்களுக்கு உதவப்போவதாக அவர் தெரிவித்தார்.
அப்பட்டமான பொய்கள் கேலிக்கூத்து
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்குத் தொடர்பு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் கூறினார்.

“இவை அப்பட்டமான பொய்கள். இவையெல்லாம் ஒரு கேலிக்கூத்து,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

