Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முடிவுக்கு வரும் நல்லாட்சி! மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு

February 15, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அடுத்த வெசாக் போயா தினத்திற்குள் முற்றுப்பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

மஹரகமவில் உள்ள விகாரையில் காலஞ்சென்ற பெல்லன்வில விமலரத்ன தேரரின் நினைவுதான நிகழ்வு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட பின்னர், சமகால அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
“இந்த அரசாங்கத்தின் ஆயுள் இன்னும் இரண்டு வருடங்கள் இல்லை. அடுத்த வருடம் நல்லாட்சியின் ஆயுள் நிறைவடைகிறது. 500 நாட்களாகின்றன. இன்னும் இருப்பது சொற்ப நாட்களேயாகும். இன்னும் ஒரு வெசாக் போயா தினமே இருக்கிறது. நாங்கள் பல சேவைகளை செய்திருக்கின்றோம். நாட்டை கட்டியெழுப்பியிருக்கின்றோம். போரை முடிவுறுத்தியதன் விளைவாகவே விகாரைகளுக்கு பக்தர்கள் வர முடிகிறது.

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சுதந்திரமாக செயற்படவும், எமக்கு விரோதமாக சரி வாக்களிப்பதற்கும் பலம் கிடைத்திருப்பது விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடித்தமையிலாகும். அப்படியான போரை முடிவுறுத்தி அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்தது எமது அரசாங்கமாகும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் அளித்த ஆணையை மதித்து, புரிந்து கொள்வதை விடவும் 113 உறுப்பினர்களை ஏற்படுத்தி அரசாங்கத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் சிந்திக்கக்கூடாது. அதுவே மகாநாயக்க தேரர்களதும் கருத்தாகும்.

கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையும், லிபரல் இனவாதத்தை நோக்கிச்செல்லும் அரசாங்கம் குறித்து அவர் அண்மையில் விளங்கப்படுத்தினார். இவற்றுக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். மாறாக 113 உறுப்பினர்களை ஏற்படுத்தி அரசாங்கத்தை அமைப்பது முக்கியமல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

திருகோணமலை துறைமுக வளவினுள் பீரங்கி மீட்பு

Next Post

தொண்டர் ஆசிரியர்கள் வடக்கில் போராட்டம்!

Next Post

தொண்டர் ஆசிரியர்கள் வடக்கில் போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures