Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முகம், தலையை மறைக்க வேண்டும் என்றால் மத்திய கிழக்குக்கு சென்றுவிடுங்கள்

July 17, 2019
in News, Politics, World
0

இலங்­கை­யி­லுள்ள அனைத்துப் பாட­சா­லை­க­ளையும் கலவன் பாட­சா­லை­க­ளாக மாற்ற வேண்டும். இன ரீதி­யான பாட­சா­லைகள் இயங்கக் கூடாது. அனைத்து பாட­சாலை மாணவ, மாண­வி­களும் ஒரே சீருடை அணிய வேண்டும். முகத்­தையோ, தலை­யையோ மறைக்க முடி­யாது. அவ்­வாறு அவர்கள் மறைக்க வேண்­டு­மென்றால் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்குப் போய் விடுங்கள்’ என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் தெரி­வித்தார்.

அனு­ரா­த­பு­ரத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற வர்த்­தக சமூ­கத்­தி­ன­ரு­ட­னான சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், நாட்டில் ஒரு தேசிய இனத்தை உரு­வாக்க வேண்­டு­மென்றால் உயர்தரத்தில் சித்­தி­ய­டையும் அனைத்து மாண­வர்­க­ளுக்கும் இரா­ணுவப் பயிற்சி வழங்­கப்­பட வேண்டும். அத்­தோடு அவர்­க­ளுக்கு நாட்டின் வர­லாறு போதிக்­க­ப்பட வேண்டும்.

டாக்டர் ஷாபி சிஹாப்தீன் சம்­பவம், சஹ்­ரானின் சம்­பவம் போன்­ற­தல்ல. சஹ்ரான் உட்­பட 8 தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் வந்­தார்கள். திடீ­ரென மக்­களைக் கொன்­றார்கள். டாக்டர் சாபி சிஹாப்தீன் சிங்­க­ள­வர்­களை நண்­பர்­க­ளாக்கிக் கொண்டு பெண்­க­ளுக்கு கர்ப்­பத்­தடை செய்தார். தற்­போது 900 பெண்கள் கருத்­த­டைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். நாங்கள் இல்­லா­விட்டால் டாக்டர் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருப்பார். இவ­ருக்கு சவூ­தி­யி­லி­ருந்து நிதி கிடைத்­துள்­ளது. அவ­ரது வங்கி கணக்­குகள் முறை­யாக பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அரபு மத்­ர­ஸாக்­களில் 30 ஆயிரம் மாண­வர்கள் வரையில் கல்வி கற்­கி­றார்கள். அவர்கள் 30 ஆயிரம் பேரே எதிர்­கா­லத்தில் அடிப்­ப­டை­வா­திகள். புத்தர் சிலை­களை உடைக்க வேண்டும். அல்லாஹ் மாத்­தி­ரமே வணங்­கப்­பட வேண்டும். புத்­தரை வணங்­கு­ப­வர்கள் மடை­யர்கள். அல்­லாஹ்வை வழி­ப­டா­த­வர்­களைக் கொலை செய்ய வேண்டும். அவ்­வாறு கொலை செய்தால் நாங்கள் சுவர்க்­கத்­துக்குச் செல்­லலாம் என்று அவர்கள் உறு­தி கொண்­டுள்­ளார்கள்.குண்­டுத்­தாக்­கு­தல்­தா­ரிகள் அல்ல பிரச்­சினை. ஹிஸ்­புல்லாஹ் பல்­க­லைக்­க­ழகம் என்று ஒன்று நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கி­றது. கோடிக்­க­ணக்­கான சவூதி நிதி இதற்கு செல­வி­டப்­பட்­டுள்­ளது. ஹிஸ்­புல்­லாஹ்வை ஆளுநர் பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்கே நான் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை மேற்­கொண்டேன். சஹ்­ரானை விட ஹிஸ்­புல்லாஹ் பயங்­க­ர­மா­னவர். சஹ்­ரானை விட டாக்டர் ஷாபி சிஹாப்தீன் பயங்­க­ர­மா­னவர்.

முஸ்­லிம்கள் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கைப்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள். நக­ரங்­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டுள்­ளார்கள். காணி­களைக் கைப்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள்.

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளுக்­காக அவர்­க­ளுக்கு சலு­கைகள் வழங்கப்படுகின்றன. சிங்களவர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு கைகோர்க்க வேண்டும்.
நாட்டில் ஒரே ஒரு தேசிய கல்வி கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு மாணவர்கள் இன, மத பேதங்களின்றி அக்கட்டமைப்புக்குள் இணைக்கப்பட வேண்டும் என்றார்.

Previous Post

ஐக்கிய தேசிய கட்சியினுள் கருத்து முரண்பாடுகள்

Next Post

பிறந்த நாளன்று புதிய படம்… விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்!

Next Post

பிறந்த நாளன்று புதிய படம்... விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures