Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மீண்டும் விமானசேவை |இலங்கையின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் | இந்திய ஊடகம்

December 12, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் நாட்டுக்குள் வர 13ஆம் திகதி வரை தடை

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமானபோக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை நிதிநெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு உதவும் என இந்தியாவின் நியுஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இந்தியாவும் இலங்கையும் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவையை மூன்றுவருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ளன.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தில் சென்னையிலிருந்து சென்ற முதல் விமானம் தரையிறங்கியது என இலங்கை அதிகாரியொருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அலையன்ஸ் எயர்சேவிசின் விமானம்; இலங்கை நேரப்படி 11.25க்கு தரையிறங்கியது என யாழ்ப்பாண விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெரிவு செய்யப்பட்ட பயணிகளுடன் ( அனேகமாக அதிகாரிகள்) தரையிறங்கிய விமானத்தை வரவேற்பதற்காக சிறிய நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

இந்த விமானம் 2.50க்கு சென்னை திரும்பவுள்ளது,அலையன்ஸ் எயர் பிளைட் வாரத்திற்கு நான்கு தடவைகள்   இரு நகரங்களிற்கும் இடையில் விமானசேவையை நடத்தவுள்ளது.

2019 இல் பலாலி விமானநிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம் என பெயர்மாற்றப்பட்டது – இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையமாக மாறியது.

விமானநிலையத்தை மீளஅபிவிருத்தி செய்வதற்கான நிதியை இலங்கையும் இந்தியாவும் வழங்கியிருந்தன.

நிதி நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு வருமானம் ஈட்டித்தரும் மார்க்கமாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.

எனினும் கொரோனாபெருந்தொற்று இலங்கையின் சுற்றுலாத்துறையை முற்றாக முடக்கியுள்ளது – இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான முக்கிய காரணமாக அது காணப்படுகின்றது.

விமானசேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை நிதிநெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது 

Previous Post

காணாமல்போன மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு

Next Post

நாவலர் தினம் – கருத்தரங்கு

Next Post
நாவலர் தினம் – கருத்தரங்கு

நாவலர் தினம் - கருத்தரங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures