Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மீண்டும் தமிழீழம் மலரும் இரத்த ஆறு ஓடும் | விமல் வீரவன்ச

January 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டு தமிழீழம் மலர வழிவகுக்கும், நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்த நிலையில் அக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் வினவிய போதே உத்தர லங்கா சபாவவின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.

13ஆவது திருத்தத்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு பிளவுபடாது. எனவே இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அப்படிச் செய்யாமல் இருக்கவேண்டுமானால் யாராவது நாடாளுமன்றத்தில் 22ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்று சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

நாடு பிளவுபடும்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும்.

இப்படியான நிலைமை ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதிக்கும் தெரியும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

இதைப் பல தடவைகள் நாம் தெரிவித்து விட்டோம். தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

மக்களை ஏமாற்றும் நோக்கில் ஜனாதிபதி

சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே ஜனாதிபதி செயற்படுகின்றார்.

ஆனால், சிங்கள மக்கள் எப்போதும் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இப்படியான கருத்துக்களை வெளியிட்டுத் தனது பதவிக் காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்துதான் அவரின் சர்வகட்சிக் கூட்டத்தை நாம் புறக்கணித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

Previous Post

விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ பட அப்டேட்

Next Post

19 வயதின்கீழ் மகளிர் இருபது20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று: இந்தியா | இங்கிலாந்து மோதல்

Next Post
19 வயதின்கீழ் மகளிர் இருபது20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று: இந்தியா | இங்கிலாந்து மோதல்

19 வயதின்கீழ் மகளிர் இருபது20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று: இந்தியா | இங்கிலாந்து மோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures