Monday, July 21, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மின் கட்டணத்தை குறைக்க வேண்டாமென அரசாங்கம் மின்சாரசபைக்கு உத்தரவு | ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

December 24, 2024
in News, Sri Lanka News
0
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கமும் மின்சாரசபையும் இணைந்து செயற்பட்டு மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நிவாரணத்தைத் தடுத்துள்ளன.

மக்களை ஏமாற்றாமல் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலங்களில் மின்சாரக்கட்டணத்தை மூன்றில் இரண்டு மடங்கால் குறைப்பதாகக் கூறியது.

மின்சார சட்டத்துக்கமைய இவ்வாண்டிறுதியில் மின்கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொண்டிருக்க வேண்டும்.

எவ்வாறிருப்பினும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டாம் என அரசாங்கத்தினால் மின்சாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கமும் மின்சாரசபையும் இணைந்து செயற்பட்டு மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நிவாரணத்தைத் தடுத்துள்ளன.

தேர்தல் காலங்களில் இவர்கள் கூறியதற்கு புறம்பாக தற்போது மூன்று ஆண்டுகளின் பின்னரே மின் கட்டணத்தில் திருத்தங்கள் ஏற்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மக்களை ஏமாற்றாமல் மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று ஓய்வு பெற்றவர்களின் சேமிப்பு பணத்துக்கு அதிக வட்டி வழங்குவதாகவும் தேர்தல் காலங்களில் வாக்குறுதியளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வட்டியும் குறைக்கப்பட்டுள்ளதாகவே தெரியவருகிறது. அது மாத்திரமின்றி சேமிப்புக்கான வருட வட்டியில் 10 சதவீதம் அரசாங்கத்தால் அறவிடப்படுகிறது. இது அநீதியாகும்.

தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இது பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் ஓரிரு அரசியல்வாதிகளின் தலையீட்டுடன் வழங்கப்பட்டவை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டதே தவிர, ஏனையவை தொடர்பில் எந்த தகவலும் இல்லை.

அதேவேளை சட்டத்துக்கு முரணாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யுமாறும் வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.

Previous Post

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

Next Post

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Next Post
சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோண்டர்ஸை வீழ்த்தி ஐ லீக் கிண்ணத்தை வென்றெடுத்தது றினோன்

சோண்டர்ஸை வீழ்த்தி ஐ லீக் கிண்ணத்தை வென்றெடுத்தது றினோன்

July 21, 2025
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வேண்டும் – சம உரிமை இயக்கம் ஏற்பாடு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கல்முனையில் கையெழுத்துப் போராட்டம்

July 21, 2025
வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

July 21, 2025
சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

யாழில் வாள்வெட்டு குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

July 21, 2025

Recent News

சோண்டர்ஸை வீழ்த்தி ஐ லீக் கிண்ணத்தை வென்றெடுத்தது றினோன்

சோண்டர்ஸை வீழ்த்தி ஐ லீக் கிண்ணத்தை வென்றெடுத்தது றினோன்

July 21, 2025
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வேண்டும் – சம உரிமை இயக்கம் ஏற்பாடு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கல்முனையில் கையெழுத்துப் போராட்டம்

July 21, 2025
வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

July 21, 2025
சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

யாழில் வாள்வெட்டு குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

July 21, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures