மின்சார கட்டண அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து சனிக்கிழிமை (4) மாலை புத்தளம், பாலாவி சந்தியில் தீப்பந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இப்போராட்டத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி மற்றும் முன்னால் வடமேல் மாகான சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
அரசாங்கத்துக்கு எதிரான வசனங்கள் பல அந்த பதாதைகளில் எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






