அஸ்வெசும திட்டத்தினால் அரசாங்கத்தின் நிதி உதவியை பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய பயனாளர்களுக்கான மார்ச் மாதத்துக்கான கொடுப்பனவுத் தொகை நாளை வியாழக்கிழமை (12) பயனாளர்களின் வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்படும் என இலங்கை நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
Geographic Reference
இந்த அஸ்வெசும கொடுப்பனவானது 1,408,635 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கொடுப்பனவுப் பகிர்வின் முதற்கட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 11,179,801,250.00 ரூபாவுக்கும் அதிக தொகை வைப்பிலிடப்பட்டவுள்ளது.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கொடுப்பனவுப் பகிர்வாக, 2,350,530,000.00 ரூபாவுக்கும் அதிக தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
