நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் தொடர்பில் விவாதிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் விசேட அமர்வினைக் கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ம.அருள்குமரன் , ந.லோகதயாளன் , நளினா ஆகியோர் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனல்ட்டிட கோரிக்கை விடுத்துள்ளனர் .
தற்போது எழுந்துள்ள கொரோனா தாக்கம் நாட்டின் பல பாகத்திலும் கண்டறியப்படும் நிலையில் மாநகர எல்லைக்குள் ஏற்படுமானால் மேற்கொள்ள வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் , சபை எல்லைப் பரப்பிற்குள் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகளுடன் சபை ரீதியிலான பங்களிப்புக்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

