Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒவர் கைது

March 18, 2018
in News, Politics, World
0

காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவருடன் வந்த ஜந்து பேர் தப்பியோடியுள்ளனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (18) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் பொகவந்தலாவ டின்சின் பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள் ஏற்கனவே அந்த பிரதேசத்தில் பலமுறை சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யபட்ட சந்தேக நபரை நாளைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

Next Post

இலங்கை அரசின் கோரிக்கையை மறுத்த அல் ஹுசைன்

Next Post

இலங்கை அரசின் கோரிக்கையை மறுத்த அல் ஹுசைன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures