Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மஹிந்த, பஷிலைப் போன்று கோட்டாவும்  பதவி விலகும் நாள் வெகுவிரைவில் – டில்வின் 

July 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மகிந்த மற்றும் பசில் வெளிநாடு செல்ல தடைவிதிக்குமாறு கோரிக்கை

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகியதைப் போன்று கோட்டாபய ராஜபக்ஷவும் தனது பதவியை இராஜிநாமா செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.

மக்கள் தமது பலத்தால் அவரை நிச்சயம் பதவி விலக செய்வார்கள். இதனை எவராலும் தடுக்க முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் (04) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இராணுவத்தினர் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றமையும் அரசாங்கத்தின் ஒரு வழிமுறையாகும். இது பாதுகாப்பு துறையினருக்கும் மக்களுக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடாகும்.

இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமக்கு பாதுகாப்பு துறையினருடன் எவ்வித பிரச்சினையும் கிடையாது.

இந்த அரசாங்கத்தை பதவி விலக செய்வதே எமது இலக்காகும். அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கியவர்கள் மக்களாவர்.

எனவே அரசாங்கத்தை விட அதிகாரம் மிக்கவர்கள் மக்களே. அதன் காரணமாகவே பதவி விலக வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இல்லாமலிருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜிநாமா செய்ய நேர்ந்தது. பஷில் ராஜபக்ஷவுக்கும் இதே நிலைமை ஏற்பட்டது.

அதே போன்று வெகுவிரைவில் கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்படும். மக்கள் அவரை பதவி விலக செய்வார்கள். இதனை எவராலும் தடுக்க முடியாது. அவரை பதவி விலக செய்வதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாயின் அதனை எதிர்கொள்ளும் திறன் எமக்கிருக்கிறது.

இதன் ஒரு அங்கமாகவே அரசாங்கம் தற்போது புலிகள் விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது , திடீரென புலிகள் தலை தூக்குவார்கள். இது மிகவும் பழைய வழிமுறை என்பதை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துகின்றோம். இவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்றி தற்போது மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.

Previous Post

இலங்கை மகளிர் அணியை வெற்றிகொண்ட இந்திய மகளிர் 

Next Post

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை மாற்றியமைக்க முடியும் | ரணில்

Next Post
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை மாற்றியமைக்க முடியும் | ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures