Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கியதன் காரணமென்ன?: டக்ளஸ்

October 29, 2018
in News, Politics, World
0

பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றமை தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களது நன்மை கருதியே எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பிரதமராகப் பதவியேற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதவு வழங்குவதென முடிவெடுத்துள்ளது.

எமக்குக் கிடைக்கின்ற பதவிகள் மற்றும் அதிகாரங்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு நாம் எமது பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தோம்.

அதன்மூலம் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பல்வேறுபட்ட திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். இவ்வாறானதொரு சூழலில் நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எமது முழுமையான ஆதரவினை வழங்கத் தீர்மானித்துள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

ரணிலை பதவியிலிருந்து நீக்க இதுவே காரணம்! மைத்திரி விசேட அறிவிப்பு

Next Post

கனடா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Next Post

கனடா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures