Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மலேஷிய நாட்டு இளவரசி நெதர்லாந்து நாட்டு இளைஞரை திருமணம் செய்தார்.

August 15, 2017
in News, World
0

மலேஷிய நாட்டு இளவரசி ஆமினா, மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த, நெதர்லாந்து நாட்டு இளைஞரை, நேற்று திருமணம் செய்தார்.

மன்னர் குடும்பத்தின் பாரம்பரிய இஸ்லாமிய முறைப்படி, ஜோஹர் பாரு நகரில் மிக ஆடம்பரமாக திருமணம் இந்த திருமணம் இடம்பெற்றது.

தென்கிழக்காசிய நாடான மலேஷியாவின், ஜோஹர் மாகாண மன்னராக இருப்பவர் சுல்தான் இப்ராஹீம். அவரது ஒரே மகள் துன்கு துன் ஆமினா.

இவருக்கு தற்போது 31 வயது. இவர் ஐரோப்பிய நாடான, நெதர்லாந்தைச் சேர்ந்த, 28 வயதான டென்னிசை மூன்று ஆண்டுகளாக, காதலித்து வந்தார்.

மலேஷியாவில், கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த டென்னிஸ், கால் பந்தாட்டம் மற்றும் ‘மாடலிங்’ கில் ஆர்வம் உடையவர்.
ஓட்டல் ஒன்றில் சந்தித்த போது, இவர்களுக்கு காதல் ஏற்பட்டது.

ஆமினாவின் விருப்பப்படி, கிறிஸ்தவரான டென்னிஸ், முஸ்லிமாக மதம் மாறி, முகமது அப்துல்லா என, பெயரை மாற்றினார். இதன்பின், தன் தந்தை சுல்தான் இப்ராஹீடம் கூறி, திருமணத்திற்கு சம்மதம் பெற்றார்.

இதையடுத்து, இருவரது திருமணம், மலேஷியாவின் ஜோஹர் பாருவில், நேற்று கோலாகலமாக நடந்தது.

இங்குள்ள அரண்மனையில், மிக ஆடம்பரமாக நடந்த திருமண நிகழ்ச்சியில், ஆமீனாவுக்கு, டென்னிஸ் என்ற அப்துல்லா, மோதிரம் மாற்றினார்.

அரண்மனைக்குள் நடந்த நிகழ்ச்சியில், 1,200 பேர் பங்கேற்றனர். வெளியில் இருந்தபடி, ஆயிரக்கணக்கானோர், பிரமாண்ட திரைகளில், திருமணத்தை பார்த்து ரசித்தனர். தடபுடலான விருந்தும் வழங்கப்பட்டது.

அரண்மனை மட்டுமின்றி, ஜோஹர் பாரு முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அமெரிக்காவின் செயற்பாடுகளைப் பொறுத்தே முடிவை அறிவிப்பேன் – கிங் யொங் உன்

Next Post

தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலை – சிறிலங்கா இராணுவ உயரதிகாரி

Next Post
தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலை  – சிறிலங்கா இராணுவ உயரதிகாரி

தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலை - சிறிலங்கா இராணுவ உயரதிகாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures