Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னாரில் அதிகவிலைபோகும் மணல் – மக்கள் அவலம்

July 14, 2017
in News
0
மன்னாரில் அதிகவிலைபோகும் மணல் – மக்கள் அவலம்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ள போதும், வீட்டுத்திட்டத்திற்கு தேவையான மணல் மண்ணை பெற்றுக்கொள்ள வீட்டுத்திட்ட பயனாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பயனாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகளை ஆம்பித்துள்ளனர்.

எனினும் வீட்டு திட்டத்திற்கு அத்தியாவசியப் பொருளான மணல் மண்ணைப் பெற்றுக்கொள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், சுமார் 28 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒரு டிப்பர் மணல் மண்னை பெற்றுக்கொள்ள 35 ஆயிரம் ரூபா முதல் 42 ஆயிரம் ரூபா வரை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணல் மண்ணுக்கான அனுமதிப்பத்திரம் ஒரு நாளைக்கு செல்லபடியாகும் வகையில் மன்னார் பிரதேசச் செயலகத்தினால் மண் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படுகின்ற போதும் தூர இடங்களில் இருந்து மன்னாரிற்கு மண் கொண்டு வரப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Previous Post

தென்கொரிய இலங்கையருக்கு மூன்று மாத காலா அவகாசம்

Next Post

90 பேருடன் ஆரம்பமாகிய கதிர்காம பாதயாத்திரை !!

Next Post

90 பேருடன் ஆரம்பமாகிய கதிர்காம பாதயாத்திரை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures