Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனையை ஆரம்பித்தது பிரித்தானியா!

August 26, 2020
in News, Politics, World
0

இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

ஒக்ஸ்போர்டு தடுப்பூசி உள்ளிட்டவை கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முயற்சில் நல்ல பலன் கிடைப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தின் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனாகா கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்நிறுவனம் ஏஇஎட்டி 7442 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனையை ஆரம்பித்துள்ளது. இந்த பரிசோதனைக்காக 18 முதல் 55 வயது வரை உள்ள 48 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் ஏஇஎட்டி 7 ஆயிரத்து 442 கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இந்த பரிசோதனையில் தடுப்பூசி கொரோனா வைரஸினை கடுப்படுத்தி கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அடுத்த இரண்டு கட்ட பரிசோதனைகளும் துரிதப்படுத்தப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா!

Next Post

மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப சில பெற்றோர்கள் அச்சம்!

Next Post

மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப சில பெற்றோர்கள் அச்சம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures