Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மத்திய அரசைப் போன்றே தமிழக அரசும் இலங்கைக்கு உதவலாம் | இந்திய வெளியுறவு அமைச்சர்

May 3, 2022
in News, Sri Lanka News
0
இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய மத்திய அரசு இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு மேலதிகமாக தமிழக அரசும் இலங்கைக்கு தனது உதவியை வழங்க முடியும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

iftamil - இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா எப்போதும்  இருக்கும்: எஸ்.ஜெய்சங்கர்!

தமிழக அரசு இலங்கைக்கு நிவாரணமாக அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்காக அனுமதி கோரி , சட்டசபையில் சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கலாநிதி ஜெங்ஷங்கர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு தூதுக்குழுவிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக தமிக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அமைச்சர் ஜெங்ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு தமிழக அரசு தனது தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தலாம் என்றும் அவர் தனது கடிதத்தில் பரிந்துரைத்துள்ளார்.

இலங்கைக்கு நிவாரணமாக அரிசி உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு கடந்த 29 ஆம் ஆண்டு தமிழக அரசு தீர்மானித்தது.

தமிழக முதலமைச்சரால் கடந்த வாரம் இலங்கைக்கு நிவாரணம் வழங்குவதற்காக சட்டசபையில் முன்வைக்கப்பட்ட யோசனை நிறைவேற்றப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறித்த நிவாரணப்பொருட்களை தமது படகுகள் ஊடாக இலங்கைக்கு கொண்டு சேர்ப்பதற்கு ராடீமஷ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தமிழக அரசு இந்திய ரூபாவில் 80 கோடி பெறுமதியான 40 000 மெட்ரிக் தொன் அரிசியையும் , 28 கோடி பெருமதியான மருந்துகளையும் , 15 கோடி பெறுமதியான 500 தொன் சிறுவர் பால்மாவினையும் வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

புதன் கிழமை விசேட உரையை நிகழ்த்தி விட்டு பதவி விலக தயாராகும் மகிந்த

Next Post

நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் | ஆளுங்கட்சி

Next Post
ஆர்ப்பாட்டங்களால் நாடு பின்னடைவை சந்திக்கும் |  பிரசன்ன ரணதுங்க

நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் | ஆளுங்கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures