Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மத்திய அரசுடன் இணைந்து செயற்படதயார்! – சிவநேசன்

October 31, 2017
in News, Politics
0
மத்திய அரசுடன் இணைந்து செயற்படதயார்! – சிவநேசன்

வடக்கு மாகாண சபை மத்திய அரசுடன் இணைந்து செயற்படாவிட்டால் எமது பிரதேசங்களில் பாரிய திட்டங்கள் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக நாம் பாரிய திட்டங்களை எமக்கு கிடைக்கின்ற நிதியில் நடைமுறைப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லை.எமக்கு கிடைக்கும் நிதியை வைத்து பால் கொள்வனவு செய்யும் பாத்திரங்களைத்தான் எம்மால் வழங்க முடியும். மக்களுக்கான பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டுமானால் நாம் மத்திய அரசுடன் இணைந்து பயனித்தாலே சாத்தியமாகும்.
கடந்த காலங்களில் விட்ட தவறுகளை நான் செய்யவிரும்பவில்லை. நான் விவசாய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கொழும்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தேன். அப்போது மாகாண சபை கிடைக்கின்ற பாரிய திட்டங்கள் அனைத்தையும் சாக்குப்போக்கு காரணங்களை கூறி நிராகரித்து வருகின்றது என்பதை சுட்டிக்காட்டினார். அவர்கள் கூறுவது போல நாமும் பாரிய திட்டங்களை நிராகரித்து வருகின்றோம். இதனால் எமது பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியவில்லை. விவசாயத்துறையில் பல அனுகூலமான வேலைத்திட்டங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்த திட்டங்களை நாம் நிராகரிக்காது. அவர்களுடன் இணைந்து நாம் பயணிக்க தீர்மானித்துள்ளோம். அண்மையில் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் அல்லது அரை மானியத்தில் விதை நெல்லை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அதற்கு ஜனாதிபதி தனது பதிலில் இந்த திட்டத்துக்கு ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது. இதனை வருட நிறைவில் கேட்கின்றீர்கள். இந்த திட்டத்தை முன்பே சமர்ப்பித்திருந்தால் நாம் வழங்க நடவடிக்கை எடுத்திருப்போம் என எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் மத்திய அரசுடன் இணைந்து செயற்படுவது என தீர்மானித்துள்ளேன் என்றார்.

Previous Post

பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

Next Post

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை சம்பந்தன் அவமதித்தார்!

Next Post
நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை சம்பந்தன் அவமதித்தார்!

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை சம்பந்தன் அவமதித்தார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures