Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மதுவரித் திணைக்களம் 7.9 பில்லியன் ரூபா வரி நிலுவையைச் செலுத்தவில்லை – சம்பிக்க ரணவக்க

August 21, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கோட்டாபய கூறுவது முற்றிலும் பொய் | அம்பலப்படுத்திய சம்பிக்க

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்,மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம்  இந்த ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம்  1680  பில்லியன் ரூபாவை திரட்டிக் கொண்டுள்ளன.

மதுவரி திணைக்களம்  பிரதான மதுபான நிறுவனங்களிடமிருந்து 7.9 பில்லியன் ரூபா வரியை இதுவரை அறவிடவில்லை என பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது வழிவகைகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் அறிக்கையை சபைக்கு முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரச வருவாயை ஈட்டிக் கொள்வதற்கு பல யோசனைகைள முன்வைத்துள்ளோம். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகிய மூன்று அரச நிறுவனங்கள்  கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள்  மாத்திரம் 1680.4 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளன.

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வரி விலக்களித்ததால்   978 பில்லியன் ரூபா இழக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.வரி  செலுத்தாதவர்களின் 900 வங்கி கணக்குகளை முடக்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன்  18 வயதுக்கு மேற்பட்ட  17 மில்லியன் பேருக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (டின் இலக்கம்) வழங்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க பரிந்துரைத்தோம்.இதற்கமைய  5 மில்லியன் பேருக்கு  டின் இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.

தங்கம் இறக்குமதியாளர்களிடமிருந்து  வரி அறவிடல் குறித்து சிக்கல் காணப்படுகிறது.இதற்கான ஆலோசனைகளை குழுவின் ஊடாக வழங்கியிருந்தோம்.இதற்கமைய பிரதான  தங்க இறக்குமதியாளர்களில் 17 பேரில் 6 பேர் வரி செலுத்தியுள்ளனர்.அத்துடன் தண்டப்பணம் அறவிடல் கூடாக மாத்திரம் சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டு மாத்திரம் 10 பில்லியன் ரூபாவை மேலதிகமாக திரட்டியுள்ளது.

மதுவரி திணைக்களம் அறவிட வேண்டிய 7.9 பில்லியன் ரூபா வரி  இன்றும் நிலுவையில் உள்ளது. வரி செலுத்தாத பிரதான மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதி பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு  மதுவரி திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினோம்.

அனுமதி பத்திரத்தை இடை நிறுத்துவது குறித்து நிதியமைச்சு உரிய ஆலோசனைகளை வழங்காத காரணத்தால்  உரிய தீர்மானத்தை எடுக்க முடியவில்லை என்று  மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.ஆகவே  வரி செலுத்த வேண்டிய தரப்பினரிடமிருந்து முறையாக வரிகளை அறவிட்டால்  மக்கள் மீது வரி சுமைகளை திணிக்க வேண்டியதில்லை என்றார்.

Previous Post

நாளை முதல் நமது கொடி பறக்கும்: அறிக்கையில் அறிவித்தார் விஜய்..!

Next Post

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 717 முறைப்பாடுகள் பதிவு

Next Post
18 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 717 முறைப்பாடுகள் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures