Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மண்ணெண்ணெய் வழங்குமாறு மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

June 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மண்ணெண்ணெய் வழங்குமாறு மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி மஸ்கெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மஸ்கெலியா பிரதேச மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த மூன்று கிழமையாக மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இன்றைய தினம் (09) மண்ணெண்ணெய் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் வருகைதந்த நிலையில், இன்றைய தினமும் மண்ணெண்ணெய் வரவில்லை என எரிபொருள் நிலைய ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு முறையான முறைமை ஏற்படுத்தக் கோரி இன்று காலை முதல் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற சுமார் 500ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக போக்குவரத்தும் ஸ்தம்பிதமாகியிருந்தது. குறிப்பாக மஸ்கெலியா – அட்டன், மஸ்கெலியா – நல்லதண்ணி போன்ற பிரதான வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமாகியிருந்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர்.

இதனையடுத்து, நாளை அல்லது எதிர்வரும் நாட்களில் அணைவருக்கும் மண்ணெண்ணெய் கிடைக்க தாங்கள் ஏற்பாடுகளை செய்து தருவதாக எரிபொருள் நிலைய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்பிடதக்கது.

Previous Post

மட்டக்களப்பில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 4 பேர் கைது – இருவர் தலைமறைவு

Next Post

குரங்கு அம்மை இதுவரை இனங்காணப்படாத நாடுகளில் பரவுகிறது – உலக சுகாதார ஸ்தாபனம் கவலை

Next Post
டெல்டா தொற்று 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது – உலக சுகாதார ஸ்தாபனம்

குரங்கு அம்மை இதுவரை இனங்காணப்படாத நாடுகளில் பரவுகிறது - உலக சுகாதார ஸ்தாபனம் கவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures