Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மண்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வு

August 12, 2019
in News, Politics, World
0

மியான்மர் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டில் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு ஊர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாகாணத்தின் மலைப்பகுதியில் உள்ள தாப்யோ கோன் கிராமத்தில் பெய்த கனமழையால் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து 28 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், 22 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் 34 உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டில் மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்த12,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும், முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 38,000-க்கும் அதிகமாக உள்ளதாகவும் ஐ.நா.தெரிவித்துள்ளது.

Previous Post

விமான நிலைய மேற்கூரை உடைந்து கொட்டிய மழை

Next Post

ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

Next Post

ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures