Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மட்டக்களப்பில் 161 தேர்தல் சட்டவிதி மீறல்கள் முறைப்பாடுகள்

July 25, 2020
in News, Politics, World
0

பொதுத் தேர்தல் 2020 நடைபெறுவதற்கு இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகத்திற்கு இதுவரை 161 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனடிப்படையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 42 முறைப்பாடுகளும், காத்தான்கடி பொலிஸ் பிரிவில் 41 முறைப்படுகளும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 33 முறைப்பாடுகளும் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் 27 முறைப்பாடுகளும் அதிக பட்சமாக பதிவாகியுள்ளன. மேலும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 6 முறைப்பாடுகளும், வாகரை மற்றும் வவுனதீவு பொலிஸ் பிரிவுகளில் தலா 3 முறைப்பாடுகளும், வெள்ளாவெளி, மங்களகம பொலிஸ் பிரிவுகளில் தலா 1 முறைப்பாடும் பொதுவாக 4 முறைப்பாடுகளுமாக மொத்தம் 161 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் சட்டவிரோத பதாதைகள், சுவரொட்டிகள் தொடர்பாக 59 முறைப்பாடுகளும், அரச ஊழிளர்கள் அரசியலில் ஈடுபட்டமை தொடர்பாக 21 முறைப்பாடுகளும், அன்பளிப்பு வழங்கள் தொர்பாக 29 முறைப்பாடுகளும், கூட்டம் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பாக 23 முறைப்பாடுகளும், அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பாக 9 முறைப்பாடுகளும், நியமனங்கள் மற்றும் இடமாற்றம் தொடர்பாக 3 முறைப்பாடுகளும், சொல் அச்சுறுத்தல் செய்தமை தொடர்பாக 3, இலத்திரனியல் ஊடக துஸ்பிரயோகம் தொடர்பாக 2 முறைப்பாடுகளும், சமுக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் தொடர்பாக 3 முறைப்பாடுகளும், வலிந்து தாக்குதல் கும்பலாகத் தாக்கதல் தொடர்பில் 2 முறைப்பாடுகளும், பொய்ப்பிரச்சாரம் செய்தமை, அஞ்சல் வாக்கு தொடர்பாக, சட்டவிரோத நிகழ்வு ஏற்பாடு செய்தமை, வாக்காளர் உபசரிப்பு, தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல், மதத்தலைவர்கள் ஊடாக பிரசாரம் செய்தல், தீ வைப்பு எரியூட்டல் போன்றவை தொடர்பாக தலா ஒவ்வொரு முறைப்பாடுகளுமாக 161 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இம்முறைப்பாடுகளில் தேர்தல் சட்டவிதி மீறல் தொடர்பாக 155 முறைப்பாடுகளும், தேர்தல் வன்செயல்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றில் 121 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய 40 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா மாவட்ட அரச ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

Previous Post

திருமலை மாவட்டத்தை வெற்றி கொள்வோம்; ஹக்கீம் அறைகூவல்

Next Post

பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு செய்யவில்லை ;வணபிதா ஜெயக்குமார்

Next Post

பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு செய்யவில்லை ;வணபிதா ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures