Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மட்டக்களப்பில் மாணவர்கள் கைது- பேர்ள் அமைப்பு கண்டனம்

November 8, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மட்டக்களப்பில் மாணவர்கள் கைது- பேர்ள் அமைப்பு கண்டனம்

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் என்ற அமைப்பு பேர்ள் எனவும் தெரிவித்துள்ளது

பேர்ள் அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளதாவது

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனையில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுடன் இணைந்து கொண்ட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதை- நடத்தப்பட்டi பேர்ள் அமைப்பு கண்டிக்கின்றது.

மயிலத்தமடு விவகாரத்தில் பௌத்த மதகுருமார் வன்முறை மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது நடவடிக்கை எடுக்காத பொலிஸார் அதேவிவகாரத்தில் தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக துன்புறுத்தல்கள் அச்சுறுத்தல் வன்முறைகள் போன்றவற்றில் ஈடுபடுவது அவர்களின் இரட்டை அணுகுமுறையை காண்பிக்கின்றது என தமிழ்அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினரும் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைகளிற்கு எதிராக பல மாதங்களாக தமிழ் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் கால்நடைகளை தொடர்ந்தும் ஈவிரக்கமற்ற விதத்தில் கொலைசெய்வதுடன் வெடிபொருட்களை பயன்படுத்தி கொலை செய்கின்றனர்.

ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுமாறு ரணில்விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ள போதிலும் பொலிஸார் அவர்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில்  ஈடுபடுவதற்கு அனுமதித்துள்ளனர்.

மயிலத்தமடு விவகாரம் வடக்கு கிழக்கில் சிங்களமயமாக்கலை முன்னெடுத்துச் செல்வதிலும் தண்டனையின்மை கலாச்சாரத்தை வலுப்படுத்துவதிலும் அரச படைகள் பலப்படுத்தப்படுவதைக் காட்டுகிறது.

இலங்கை தற்போது நிலவும் நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிக்கும் வேளையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் அரசியல் விருப்பமின்மையை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Previous Post

இந்திய இழுவைப்படகை எமது கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாது | அமைச்சர் டக்ளஸ்

Next Post

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்

Next Post
இளையோரை ஊக்குவிக்கும் 23 வயதின்கீழ் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures