Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின

July 6, 2020
in News, Politics, World
0

கொரோனா தொற்று காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் பல கட்டங்களாக ஆரம்பிக்கப்படுகின்றன. மட்டக்களப்பில் சுகாதார நெறிமுறைகளை பேணியவாறு மாணவர்கள் பாடசாலையினுள் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர்.

இதற்கமைய 5, 11 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள இன்று அனுமதிக்கப்படுகின்றனர்.

பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் உயர் தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 5 ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

மட்டக்களப்பில் வின்சன் பெண்கள் உயர்தரப் பாடசாலை, புனித மிக்கல் கல்லூரி ஆகிய நகர் பகுதி பாடசாலைகளில் மிகுந்த சுகாதாரப் பாதுகாப்புடன் மாணவர்கள் பாடசாலையினுள் அனுமதிக்கப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.

பொது சுகாதார தலைமைப் பரிசோதகர் குறித்த செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் மாணவர்களுக்கு நான்கு வித சுகாதார நெறிமுறை செயற்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 12 மற்றும் 10 தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

அடுத்த மாதம் 27 ஆம் திகதி முதல் 3,4,6,7,8 மற்றும் 9ம் தரங்களில் பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உண்மையான பௌத்தனாக நான் இருக்கிறேன் – சஜித் பிரேமதாச

Next Post

கிராமங்களை உருவாக்கி மக்களை குடியேற்ற சிரமப்பட்டோம் ; றிசாட்

Next Post

கிராமங்களை உருவாக்கி மக்களை குடியேற்ற சிரமப்பட்டோம் ; றிசாட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures