Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மட்டக்களப்பில் இரு பிள்ளைகளின் தாய் மரணம் | மூவர் வைத்தியசாலையில்

June 8, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு எனும் கிராமத்தில் வியாழக்கிழமை (08.03.2023) மாலை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நஞ்சுத்தன்மையான கடல்மீனை சமைத்து சாப்பிட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமையால் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் 27 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும், 50 வயதுடைய பெண், 19 வயதுடைய ஆண், மற்றும் மூன்றரை வயதுடைய ஆண்பிள்ளை ஆகிய மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 50 வயதான பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாவார்.

மாங்காடு பகுதியிலுள்ள கடற்கரையில் மீனவர்களின் வலையில் சிக்கிய மீனை வீசியுள்ளனர். இதனை குறித்த குடும்பத்தினர் பொறுக்கியுள்ளதாகவும், அப்போத இது சமைப்பதற்கு உகந்த மீன் இல்லை எனவும் அதனை எடுக்க வேண்டாம் எனவும் மீனவர்கள் தெரிவித்ததையும் அவர்கள் பொருட்படுத்தாது அந்த மீனினத்தை அவர்கள் எடுத்துச் சென்றிருந்தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குடும்பத்தினர் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியதையடுத்து களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் . கடல் மீனினமான பேத்தை என்ற மீனை அவர்கள் மதிய உணவுக்காக சமைத்து உட்கொண்டதன் காரணமாகவே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பகுதி பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

Previous Post

வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம் பெறும் | சம்பிக்க

Next Post

கஜேந்திரகுமார் மீது காட்டிய அக்கறை டயனா மீது இல்லை | நளின் பண்டார

Next Post
கஜேந்திரகுமார் மீது காட்டிய அக்கறை டயனா மீது இல்லை | நளின் பண்டார

கஜேந்திரகுமார் மீது காட்டிய அக்கறை டயனா மீது இல்லை | நளின் பண்டார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures