கனடாவின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில், வேன் புகுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கனடா தலைநகர் டொரன்டோ பகுதியில் மக்கள் அதிகமாக குழுமியிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மக்கள் இடையே புகுந்தது. இந்த சம்பவத்தில், 9 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
வேன் டிரைவரை, கனடா போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், டிரைவரின் பெயர் அலேக் மினாசியன் என்றும், அவனுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.