Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்களை நோக்கி படையினர் துப்பாக்கிகளை நீட்டமாட்டார்கள் – சரத்

October 30, 2019
in News, Politics, World
0

நாட்டில் வலுவான பாதுகாப்பு முறைமை அமுல்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

திவுலபிட்டிய பகுதியில் நேற்று  இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ரத்துபஸ்வலவில் சுத்தமான குடிநீரைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய படையினர் சிறையில் இருக்க அந்த சம்பவத்திற்கு காரணமான ராஜபக்ஷ சுதந்திரமாக நடமாடித்திரிவதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.

அத்தோடு சேமலாப நிதியைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சுட்டுக் கொன்ற விசேட அதிரடி படையினர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராஜபக்ஷ தொடர்ந்து ஆட்சியில் நீடித்தார் என்றும் சாடினார்.

இதேவேளை சிலாபத்தில் எரிபொருள் மானியம்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களும் தற்போது சிறையில் இருக்க மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரமாக நடமாடி திரிகின்றார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் அமையப்போக்கும் ஆகிக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியில் இந்த நிலைமைகள் அனைத்தும் மாற்றப்படும் என்றும் முப்படைகள் மக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்ட பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் சரத் பொன்சேகா உறுதியளித்தார்.

மேலும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவே முப்படையினர் செயற்படுவார்கள், எமது ஆட்சியில் ஒரு வலுவான நாட்டை உருவாக்கி பாதுகாப்பை உறுதி செய்வோம் என கூறினார்.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிப்பேன் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரசாங்கத்தை குற்றம் சாட்டிய அறிக்கையை ஏற்க மைத்திரி மறுப்பு

Next Post

நாட்டில் தொழிநுட்ப புரட்சி ஏற்படுத்தப்படும் -சஜித்

Next Post

நாட்டில் தொழிநுட்ப புரட்சி ஏற்படுத்தப்படும் -சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures