Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்­கள் பல­மி­ருந்தால் -ஆட்­சி­ய­மை­யுங்­கள்

August 8, 2018
in News, Politics, World
0

மக்­க­ளின் பலம் உள்­ளதை நிரூ­பித்­துள் ளோம் என்று கூறும் 70 பேர் அணி, பலத்­தைக் காட்டி ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வதை விட்­டு­விட்டு, எதிர்க்­கட்­சிப் பத­விக்கு ஏன் போரா­டு­கின்­றார்­கள்?

இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்­ளார் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க.

எதிர்க்­கட்­சிப் பதவி தொடர்­பில் நேற்று நாடா­ளு­மன்­றில் நடந்த விவா­தத்­தில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.
அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது-எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யைத் தரக் கோரிப் பொது எதி­ர­ணி­யி­னர் தொடர்ச்­சி­யாக அழுத்­தம் கொடுக்­கின்­ற­னர். 42 உறுப்­பி­னர்­கள் இருந்­த­போ­தும், பின்­னர் 54 உறுப்­பி­னர்­கள் இருந்­த­போ­தும் எதிர்க்­கட்­சிப் பத­வி­யைக் கேட்­ட­னர். இப்­போது 70 பேர் உள்­ள­போ­தும் எதிர்க்­கட்­சிப் பத­வி­யைக் கோரு­கின்­ற­னர். இவர்­க­ளின் கோரிக்­கை­யில் எந்­த­வித அடிப்­படை நியா­யப்­பா­டு­க­ளும் இல்லை.

நாடா­ளு­மன்­றில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஆறு கட்­சி­கள் உள்­ளன. அந்­தக் கட்­சி­க­ளில் இருந்தே உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்­றைப் பிர­தி­நி­தி­து­வம் செய்­கின்­ற­னர். 19ஆம் திருத்­தத்­துக்கு அமைய கட்­சித் தன்­மை­க­ளைக் கைவிட்­டுச் செயற்­பட முடி­யாது. அவ்­வாறு செயற்­பாட்­டால் எதிர்க்­கட்சி ஒன்று இல்­லாத நிலைமை தோன்­றும்.

தற்­போது எதிர்க்­கட்­சி­யி­னர் எண்­ணிக்கை குறை­வு­தான். 3 கட்­சி­க­ளு­மா­கச் சேர்த்து 23 பேர்­தான் உள்­ளோம். நாம் பலம் குறைந்த எதிர்க்­கட்­சி­தான். அதை நாம் ஏற்­றுக் கொள்­கின்­றோம். சில சந்­தர்ப்­பங்­க­ளில் பல­வீ­ன­மா­கவே உள்­ளோம். ஆனால் நாடா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு ஏற்ப தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை பிர­தான எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­பட முடி­யாது என்று ஒரு­போ­தும் கூற முடி­யாது.

பொது எதி­ர­ணி­யி­னர் தமக்­குத்­தான் மக்­கள் பலம் உள்­ளது என்­கி­றார்­கள். 70 பேர் எதிர்க்­கட்­சி­யாக உள்­ள­னர் என்­கின்­ற­னர். முன்­னாள் அரச தலை­வர் ஒரு­வ­ரும் இருக்­கின்­றார். அனு­ப­வம் மிக்க தலை­வர்­கள் உள்­ளார்­கள் என்­கி­றீர்­கள். இத்­தனை பேசும் 70 பேர் ஏன் 23 பேரைக் கண்டு அஞ்ச வேண்­டும்.

உங்­கள் பலத்­தைக் காட்டி அரசை விட்டு வெளி­யேறி எதிர்க்­கட்­சி­யில் அமர்ந்து கொண்டு ஆட்­சி­யைக் கைப்­பற்ற முடி­யுமே?. அதை விடுத்து ஏன் 23 பேர் உள்ள அணி­யில் தஞ்­சம் புகுந்து செயற்­பட வேண்­டும்?.- என்­றார்.

Previous Post

அர­சி­லி­ருந்து வில­கி­னாலே எதிர்க் கட்­சி­யாக முடி­யும்

Next Post

எதிர்க்கட்­சிப் பத­வி­யால்- நாடா­ளு­மன்­றில் சர்ச்சை!!

Next Post

எதிர்க்கட்­சிப் பத­வி­யால்- நாடா­ளு­மன்­றில் சர்ச்சை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures