Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகிந்தவுக்கு சொந்தமான வீடு : சபையில் வெளிப்படுத்திய அமைச்சர்!

November 16, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் ஆரம்பிக்கப்பட்ட வியத்புர வீட்டுத் தொகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான  வீடு ஒன்று காணப்பட்டுள்ளதாக வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று (15.11.2025) வரவு செலவு திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான விவதாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த வீட்டில் பொரலஸ்கமுவ பிரதேசத்தின் முன்னாள் மேயர் அருண பிரியசாந்த வசித்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வியத்புர வீட்டுத் தொகுதி

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நியமிக்கப்பட்ட வீட்டுத்தொகுதி அறங்காவலரின் அறிக்கைகளின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் வேறு சில வெளியாட்கள் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மகிந்தவுக்கு சொந்தமான வீடு : சபையில் வெளிப்படுத்திய அமைச்சர்! | Mahinda Rajapaksa Had House In Wiyatpura Housing

இவ்வாறு வியத்புர வீட்டுத் தொகுதியில் வீடுகளை கொண்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அமைச்சர் வெளிப்படுத்தியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 39 வீடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

அரச ஊழியர்களுக்கான சம்பள கட்டமைப்பு குறித்து வெளியான தகவல்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures