Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ப.சிதம்பரம் -தொடர்ந்து திகார் சிறையில் இருக்கும் நிலை

November 13, 2019
in News, Politics, Sports, World
0

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக திஹார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நீட்டித்தது.ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் அவரை கைது செய்து விசாரணை நடத்தியது.  முதலில் கடந்த 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக 7 நாட்கள் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி தரப்பட்டது.

3 வேளையும் வீட்டு உணவு தர அனுமதி இதைத் தொடர்ந்து முந்தைய விசாரணையில் நீதிபதி அஜய் குமார் குஹர் பிறப்பித்த உத்தரவில், ‘‘நவ.13ம் தேதி வரை ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும்,’’ என்றார்.

அத்துடன் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாலும், சிறை உணவு ஒத்துக்கொள்வதில்லை எனவும் அவரது தரப்பு வக்கீல் கபில் சிபல் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்துக்கு இனி 3 வேளையும் வீட்டு உணவு, தேவையான மருந்து, மாத்திரை, தனி சிறை, வெஸ்டர்ன் டாய்லெட் போன்ற வசதிகளை செய்து தர டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ப.சிதம்பரம் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு இந்நிலையில் இன்றைய விசாரணையில், உடல்நலக்குறைவு காரணமாக திஹார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ப.சிதம்பரம்  நீதிபதி அஜய் குமார் குஹர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை நவம்பர் 27ம் தேதி வரை நீட்டித்தது.

Previous Post

திருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்க தடை!!

Next Post

17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அஜித்துடன் நடிக்கும் வடிவேலு

Next Post

17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அஜித்துடன் நடிக்கும் வடிவேலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures