Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பௌத்தவாதத்துடன் ஐ.தே.கட்சியை மீள்கட்டியெழுப்ப வேண்டும்- ரணில்

November 24, 2019
in News, Politics, World
0

சிங்கள பௌத்த கொள்கையின் அடிப்படையில் வளர்ந்த புதிய தலைவர் மற்றும் புதிய கொள்கையுடன் புதிய ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டியுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்தைப் பெற்ற புதிய ஐக்கிய தேசியக் கட்சியாக முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கட்சிக்கு சிங்கள பௌத்தத்துவ அடிப்படைகள் இல்லாமல் போனமை விசேடமாக கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டதில்லை. இதற்காக எவரின் மீதும் விரல் நீட்டாமல் தவறைச் சரி செய்துகொண்டு முன்னோக்கிச் செல்லவேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தை சிந்தித்து புதிய தலைவர் ஒன்றை உருவாக்கி அவரிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

சமூக ஊடக ஆர்வலர்களுக்கு ஜனாதிபதி விசேட செய்தி

Next Post

எதிர்க் கட்சித் தலைமை ரணிலுக்கு?

Next Post

எதிர்க் கட்சித் தலைமை ரணிலுக்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures