புத்தளம் மாவட்டத்தில் நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரம்ப பிரதேசத்தில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பாலவி பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞன் ஆவார்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.