Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதை வழக்கறிஞர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை!: நாம் தமிழர் கட்சி மறுப்பு

July 7, 2018
in News, Politics, World
0

தூத்துக்குடியில் வைகோவை தரக்குறைவாக பேசிய போதை வழக்கறிஞர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று நாம் தமிழர் கட்சி விளக்கம் அளித்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி வந்தார். அப்போது அவருக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், தூத்துக்குடி இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராக வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் மதுபோதையில் இருந்த வழக்கறிஞர்கள் ஜெகதீஷ் மற்றும் முத்தையாபுரத்தை சார்ந்த வெற்றிவேல் ஆகிய இருவரும் மதுபோதையில் வைகோவை பார்த்து தரக்குறைவாக கூச்சல் போட்டனர். இதையடுத்து வைகோவுடன் வந்த ம.தி.மு.க.வினர், அந்த இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கைகலப்பாக மாறியது.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அந்த இரு போதை வழக்கறிஞர்களும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சமூகவலைதளங்களில பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், அந்த போதை வழக்கறிஞர்கள் இருவரும் தங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று நாம் தமிழர் கட்சி மறுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்திப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வந்த பொழுது 2 வழக்கறிஞர்கள் வைகோவை தகாத வார்த்தையில் திட்டியதாகவும் பின்னர் மதிமுகவினரால் தாக்கப்பட்டதாகவும் இணையதளங்களில் செய்தி வந்துள்ளது. அதில் தாக்குதலுக்குள்ளான வழக்கறிஞர்கள் ஜெகதீஸ் மற்றும் வெற்றி ஆகிய இருவரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று வார இதழ் ஒன்றின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் தவறான செய்தி. அவர்களிருவரும் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் இல்லை. அவர்களுக்கு நாம் தமிழர் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. விசாரித்த வகையில் அவர்கள் ரஜினி மன்றத்தை சார்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது.

ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டர்லைட் போராட்டத்தில் கலவரம் செய்ததாக நாம் தமிழர் கட்சியினரை பொய் வழக்கு போட்டுக் காவல்துறை கைது செய்யும் சூழலில் இந்தச் சம்பவத்தில் நாம் தமிழர் கட்சி இணைத்திருப்பது மேலும் சிக்கலை உருவாக்கும் என்று கருதுகிறோம். “ என்று கூறப்பட்டுள்ளது.

Previous Post

திருடர்களை பிடித்தமையால் போலீசுக்கு சம்பளத்துடன் தேனிலவு

Next Post

பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்!

Next Post
பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்!

பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures