Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்

January 19, 2019
in News, Politics, World
0

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் மனித உரிமை பேரழிவு என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிலிப்பைன்சிற்கான ஆராய்ச்சியாளர் கார்லொஸ் கொன்டே, உலகின் எந்த நாடும் இதனை பின்பற்றக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விவகாரத்தை வெறுமனே குற்றச்செயலாக மாத்திரம் கருதி முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள்களிற்கு எதிரான யுத்தங்களால் அவற்றிற்கு தீர்வை காணமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக போதைப்பொருளிற்கு எதிரான யுத்தம் சொல்லொண துயரத்தையும்,சட்டத்தின் ஆட்சியின் அழிவையும் மனித உரிமைகளில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை பின்பற்றுவது குறித்து சிறிசேன உறுதியாக உள்ளார் என்றால், அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகளை எதிர்கொள்ள தயாராகவேண்டும் என பிலிப்பைன்ஸின் மனித உரிமை அமைப்பான ஐ டிவென்ட் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டாம் என ஆசிய நாடுகளின் தலைவர்களிற்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம் என ஐ டிபென்ட் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விவகாரத்திற்கு ஜனநாயக கட்டமைப்புகளை அழிக்காத மாறாக பலப்படுத்தும் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி மூலம் தீர்வை காணமுயல வேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Previous Post

கட்சியின் சின்னத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது

Next Post

இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது

Next Post

இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures