Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

போதைப்பொருளால் மரணங்கள் அதிகரிக்கும் | பலர் எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்

October 5, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
2020 இல் 27 கோடியே 50 இலட்சம் பேர் போதைப்பொருள் பயன்பாடு – ஐ.நா

நாட்டில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் ஹெரோயினை அளவுக்கதிகமாக பயன்படுத்தி ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் கண்டி வைத்தியசாலையின் விசேட மனநல வைத்தியர் கிஹான் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.இந்த தரவுகளில் வெளிப்படுத்தப்படாத அதிகளவானோர் சமூகத்தில் காணப்படலாம் என கருதுகின்றோம்.

புள்ளிவிபரங்களை நோக்கும் போது சுமார் 6 ஆயிரம் பேர் தடுப்பூசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர் என்பதோடு இவர்களில் அதிக எண்ணிக்கையானோர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் ஹெரோயினை அளவுக்கதிகமாக பயன்படுத்தி அதன்மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. காரணம் தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 16 முதல் 18 வயதுக்கிடைப்பட்ட சுமார் 28 வீதமான சிறுவர்கள், மற்றும் இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருள் உட்பட ஏதேனும் ஒருவகை போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. இந்த நிலைமை நாட்டில் பாரிய பேரழிவை ஏற்படுத்த கூடியது.

மேலும் பாடசாலையிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. குறிப்பாக போதைப்பொருள் மாத்திரைகள், தடுப்பூசிகள் சமூகத்தில் பாரியளவில் விற்பனை செய்யப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன்போது 44 ஆயிரத்து 241 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 12 கிலோ 995 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும், 100 கிலோ 932 கிராம் ஹசீஸ் ரக போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நடிகர் ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

பரத் – ரகுமான் இணைந்து மிரட்டும் ‘சமாரா’

Next Post
பரத் – ரகுமான் இணைந்து மிரட்டும் ‘சமாரா’

பரத் - ரகுமான் இணைந்து மிரட்டும் 'சமாரா'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures