Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் நிலையத்தில் மோதல்: 8 பேர் கைது

August 26, 2018
in News, Politics, World
0

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் நிலையம் மற்றும் இலுப்படிச்சேனை கிராம சேவகர் அலுவலகம் ஆகிய இடங்களில் கைகலப்பில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்பத்தகராறு ஒன்றின் காரணமாக குடும்ப உறவினர்கள் முதலில் இலுப்படிச்சேனை கிராம சேவையாளரிடம் சென்றுள்ளனர்.

முறைப்பாடு செய்யச் சென்றவர்கள் முன்னதாக கிராம சேவகரின் முன்னிலையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கைகலப்பில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து கொள்ள முடியாமற்போன கிராம சேவையாளர் சம்பந்தப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையம் செல்லுமாறு ஆலோசனை கூறியுள்ளார்.

இதன்படி கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இரு சாராரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டிருக்கும்போது மீண்டும் கைகப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பில் 3 பெண்களும், 5 ஆண்களும் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

கிளிநொச்சி இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபா

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறி தனியான ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும்

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறி தனியான ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures