Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கேட்ட சிறுவர்கள் !இலங்கையில் பலரின் மனதை உருகச் செய்த சம்பவம்!

December 8, 2018
in News, Politics, World
0

பொத்துவில் பகுதியில் பசி தாங்க முடியாத சிறுவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உணவு கோரிய சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் இரண்டு சிறுவர்கள் மற்றும் சிறுமி ஒருவர் இரண்டு நாட்களாக உணவு கிடைக்கவில்லை எனத் தெரிவித்து பொலிஸாரிடம் உணவு கோரியுள்ளனர்.

விரைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த சிறுவர்கள் தொடர்பில் பொலிஸார் ஆராய்ந்த போது அவர்களின் தந்தை வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும், தாயார் கவனிக்காமல் கைவிட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

தனது தாய்க்கு வேறு நபர் உணவு வழங்குவதாகவும், தங்களுக்கு உணவை வழங்குவதில்லை என சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி இறுதியாக உணவு உட்கொண்டதாகவும், பொலிஸ் நிலையத்திற்கு வரும் வரை உணவு எதுவும் கிடைக்கவில்லை எனவும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

14 மற்றும் 13 வயதுடைய ஆண் பிள்ளைகளும் 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் உணவு கோரியுள்ளனர்.

குழந்தைகளுக்கு உணவு வழங்காத தாயாரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous Post

சிறிலங்காவை உன்னிப்பாக கவனிக்கிறோம் – பிரித்தானியா

Next Post

யாழில் அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Next Post

யாழில் அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures