பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வகையில், ஐந்து SSPகள், இரு SPகள், ஒரு ASP ஆகிய 8 பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு இடமாற்றம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சேவையின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

