பொலிவியாவில் மீண்டும் பயிர்செய்வதற்காக விவசாய நிலங்களில் காய்ந்த புற்கள் மற்றும் களைச்செடிகளுக்கு வைக்கப்பட்ட தீ, வனப்பகுதிகளுக்கும் பரவியதில் மரங்கள் கொழுந்து விட்டு எரிந்து வருகின்றன.
பொலிவியாவில் விவசாய நிலங்களை மறுசாகுபடிக்காக தயார் செய்யும் விவசாயிகள், நிலங்களில் உள்ள காய்ந்த புற்கள் மற்றும் களைச்செடிகளுக்கு தீவைத்துள்ளனர். தீ அருகிலிருந்த வனப்பகுதிக்கு பரவியதில் சுமார் 4 லட்சத்து 71 ஹெக்டர் நிலங்கள் தீக்கிரையாகின.
சாண்டா க்ரூஸ் அருகே வனப்பகுதி தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, அருகில் குடியிருப்புகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், 16 இடங்களில் தீ இன்னும் எரிந்து வருகிறது.
மேலும் தீயணைப்பு பணிகளுக்காக கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைப்பதாக அந்நாட்டு அதிபர் எவொ மொரல்ஸ் (Evo Morales) தெரிவித்துள்ளார். மேலும் முதலில் தீ எங்கு பற்றியது என்பது குறித்து விசாரிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.