Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து, டுவிட்டரும் சிக்கியுள்ளது

May 1, 2018
in News, Politics, World
0

வாடிக்கையாளர் விபரங்களை கசியவிட்ட பிரச்னையில் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து, டுவிட்டரும் சிக்கியுள்ளது.

பேஸ்புக்கிடம் இருந்து வாடிக்கையாளர் விபரங்களை பெற்று பயன்படுத்தியதாக பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர், மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் இதே பிரச்னையில் டுவிட்டரும் சிக்கியுள்ளதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அதிகாரி அலெக்சாண்டர் கோகன் தெரிவித்துள்ளார். 2014 டிசம்பர் முதல் 2015 ஏப்ரல் வரை டுவிட்டர் நிறுவனம் தமது பயனாளர்களின் பதிவுகள், பெயர், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுக்கு அளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அதிர்ந்து போன டுவிட்டர் நிறுவனம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. அதில், விளம்பரம் தொடர்பான பணிகளில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் சில விபரங்களை பகிர்ந்து கொண்டதாகவும், தனிப்பட்ட உரிமை தொடர்பான விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி

Next Post

காஷ்மீரில் பயங்கரவாதம்: பிரிட்டன் மாணவர்கள் கண்டனம்

Next Post

காஷ்மீரில் பயங்கரவாதம்: பிரிட்டன் மாணவர்கள் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures