கண்டி, பேராதனை மருத்துவர் குழுவினரால் வித்தியாசமான முறையில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிசுவின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட கட்டி காரணமாக சுவாச பகுதி மற்றும் நுரையீரல்கள் செயற்பாடுகள் பாதிப்படைந்திருந்தன.
இதனால் Teratoma என்ற நோய்த்தன்மையில் பாதிக்கப்பட்ட சிசு தாயின் வயிற்றிலிருந்து வித்தியாசமான முறையில் பிரசவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவின் தலையில் இருந்து நெஞ்சு பகுதி வரை மாத்திரம் கர்ப்பப்பையில் இருந்து வெளியே எடுத்து சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் சத்திர சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக சிசுவை முழுமையாக வெளியே எடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கையில் இவ்வாறான சத்திரசிக்சை ஒன்று மேற்கொண்டு, சிசுவின் உயிரைப் பாதுகாப்பாக காப்பாற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். சிசுவின் சுவாச பகுதியை தடுக்கும் வகையில் காணப்பட்ட கட்டியை சத்திரகிசிச்சை மூலம் முழுமையாக அகற்றுவது கடினம் என்பதனால், தற்காலிகமாக சிசுவின் வாய் வழியாக அதனை நீக்க முதலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சிசுவைப் பாதுகாப்பாக பிரசவித்துள்ளனர். பேராதனை மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்ட கடந்த 40 வருடங்களுக்குள் இவ்வாறான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில்லை. சத்திர சிகிச்சையின் பின்னர் சிசு பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
சிசுவின் தலை மற்றும் கழுத்து பிரதேசம் மாத்திரம் வெளியே எடுக்கும் போது சிசு மற்றும் தாயின் தொப்புள் கொடி தொடர்பு துண்டிக்கப்படாமல் அதன் ஊடாக சிசுவுக்கு மூச்சு வழங்க மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.