கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கான விளக்கமறியல் மீண்டும் இன்று (17) நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தவகையில் இவர்கள் இருவரையும் இம்மாதம் 23ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று (17) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

